15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம்15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம் ...  போலி பில் தயாரிப்பு அரசு தீவிர நடவடிக்கை போலி பில் தயாரிப்பு அரசு தீவிர நடவடிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு தரகர் பரிவர்த்தனை கட்டணம் குறைப்புபங்கு வர்த்தகத்தை ஊக்குவிக்க விதிகளை தளர்த்தியது, ‘செபி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
23:58

புதுடில்லி:பங்கு வர்த்தகத்தை ஊக்குவிக்க, பங்குச் சந்தைகள், பங்குத் தரகர்களுக்கான பரிவர்த்தனை கட்டணத்தை குறைக்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ முடிவு செய்துள்ளது.

டில்லியில் நேற்று, மத்திய நிதியமைச்சர்அருண் ஜெட்லி தலைமையில், செபி இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்குச் சந்தையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்தும், அடுத்து மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பங்குச் சந்தை வளர்ச்சிக்கு, செபி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, அருண் ஜெட்லி பாராட்டு தெரிவித்தார்.பங்கு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பங்கு வர்த்தகத்திற்கான செலவை குறைப்பது, பங்குச் சந்தையில் அதிக அளவில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் இடம்பெற, முதலீட்டு விதிமுறைகளை தளர்த்துவது உட்பட, பல்வேறு தீர்மானங்களுக்கு, இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, தற்போது, பங்குத்தரகர்களின், ஒரு கோடி பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 33.33 சதவீதம் குறைக்கப்பட்டு, 15 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.அதுபோல, விளைபொருள் முன்பேர சந்தையில், வேளாண் பொருட்களுக்கான பரிவர்த்தனை கட்டணம், 93.33 சதவீதம் குறைக்கப்பட்டு, 15 ரூபாயில் இருந்து, 1 ரூபாயாக நிர்ணயம் செய்ய, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பங்குத் தரகு நிறுவனங்கள், அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு, பரிவர்த்தனை கட்டணத்தை குறைக்கும். அதனால், பங்குகளில் மேலும் அதிகமானோர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவர்.நிரந்தர உரிமம்தற்போது, பங்குகள், கடன் பத்திரங்களை பாதுகாக்கும் நிறுவனங்கள், ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.

இந்த விதிமுறையை நீக்கி, நிரந்தர உரிமம் வழங்கவும் செபி முடிவு செய்துள்ளது.பங்கு வெளியீட்டிற்கான அனுமதி, காலாவதியாகி, ஓராண்டிற்குள் மறுபடியும் விண்ணப்பிப் போருக்கான கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்படும்.பங்குச் சந்தைகள், விற்று முதல் அடிப்படையில், செபிக்கு செலுத்தும் கட்டணத்தில், 80 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடன் பத்திர முதலீட்டாளர்களின் நலன் காக்க, ‘டிபென்சர் டிரஸ்டி’ உரிமத்திற்கான குறைந்தபட்ச நிகர சொத்து மதிப்பு, 2 கோடியில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.மியூச்சுவல் பண்டுகள்மற்றும் நிதி நிர்வாக நிறுவனங்கள், விளைபொருள் முன்பேர சந்தையில் வர்த்தகம் மேற்கொள்வதற்கும், செபி இயக்குனர் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

‘ஸ்டார்ட் அப்’

பங்குச் சந்தைவலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், பங்கு வெளியீடு மேற்கொள்ள, முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்நிறுவனங்களில் பங்கு மூலதனம் மேற்கொள்ள விரும்புவோருக்கு, ‘அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்’ என்ற உரிமத்தை செபி வழங்கும்.

இந்த உரிமம் பெற, தனி நபரின் ஆண்டு வருவாய், 50 லட்சமாகவும், குறைந்தபட்ச ரொக்க இருப்பு, 5 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முதலீடுகளை பெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்குகள், ஐ.ஜி.பி., எனப்படும் பிரத்யேக பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)