15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம்15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம் ...  மிக இக்கட்டான காலகட்டம் மிக இக்கட்டான காலகட்டம் ...
போலி பில் தயாரிப்பு அரசு தீவிர நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2019
23:47

‘‘போலி பில் தயாரித்து வழங்குபவர்களின் செயல்கள், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது,’’ என, சென்னை புறநகர், ஜி.எஸ்.டி., மண்டல ஆணையர், ஜி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.
சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், போலி பில்கள் தயாரித்து மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்யும் நபர்களை, ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.இது போன்ற நடவடிக்கையில், சென்னை புறநகர், ஜி.எஸ்.டி., ஆணையரகமும் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, புறநகர், ஜி.எஸ்.டி., ஆணையர், ஜி.ரவீந்திரநாத் கூறியதாவது:சென்னை புறநகர் ஆணையரகத்தின் கீழ், கிழக்கு கடற்கரையோரம் உள்ள பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரியின் பல பகுதிகள் வருகின்றன.போலி பில் வழங்கி, உள்ளீட்டு வரி சலுகைகளை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுவாக உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், போலி பில்கள் வழங்குவதுமில்லை; பெறுவதும் இல்லை. வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களே, இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, உள்ளீட்டு வரி சலுகைகளை பெற விரும்புவர்.ஒவ்வொரு வணிகர்களின் பரிவர்த்தனைகளும், தொழில்நுட்ப ரீதியில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களது ஆரம்ப கால வரலாறு முதல், தற்போது வரையிலான பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போலி பில் தயாரிப்பில் ஈடுபடுவோர் குறித்து, விசாரணை நடந்து வருகிறது. அவர்களின் செயல்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது. விரைவில் அதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)