பதிவு செய்த நாள்
03 மார்2019
23:52
கடன் வாங்குவது, சில நேரங்களில் தவிர்க்க இயலாததாக அமைந்தாலும், கடன் வசதியை நாடுவதற்கான காரணங்கள் சரியானதாக இருக்க வேண்டும். மாறாக தவறான காரணங்களுக்கான கடன் வாங்கும் பழக்கம் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், கடன் வசதியை
நாடுவதை தவிர்க்க வேண்டிய மோசமான காரணங்கள் இவை:
வட்டி அதிகம்: பொதுவாக வீட்டு கடன் போன்றவை தவிர்க்க இயலாதவை. இந்த வகை கடனில் ஒரு சொத்தை உருவாக்க முடிவதால், இவை நல்ல கடன் என, கொள்ளப்படுகின்றன.
ஆனால்,
வாழ்வியல் விருப்பங்களுக்காக தனிநபர் கடன் அல்லது கிரெடிட்
கார்டு கடனை நாடினால், அதிக வட்டி விகிதம் பாதிக்கும்.
வரி சேமிப்பு முதலீடு: வரி சேமிப்பு முதலீடு அவசியமானது. ஆனால், கடைசி நேரத்தில் இதற்காக மொத்தமாக பணம் தேவைப்படும் நிலை இருந்து, கடன் வாங்கும் பழக்கம்
இருந்தால், அதை கைவிடுவது நல்லது. முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், கடைசி நேர முதலீட்டை தவிர்க்கலாம்.
விடுமுறை பயணம்: விடுமுறைக்கான விருப்ப பட்டியல் எல்லாரிடமும் இருக்கலாம். ஆனால், கடன் வாங்கி விடுமுறை செலவை மேற்கொள்வது சரியல்ல. தனிநபர் கடன் எளிதாக கிடைக்கலாம், ஆனால், வட்டி அதிகம். இவை செலவு மிக்கவை. இதே போல, திருமண தேவைக்காக கடன் வாங்குவதையும் தவிர்க்கவும்.
வாழ்வியல் தேவை: நவீன வாழ்க்கையில், புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது
போன்ற வாழ்வியல் விருப்பங்கள் தாக்கம் செலுத்தலாம். ஆனால்,
இத்தகைய ஆடம்பர விருப்பங்களை கடன் மூலம் நிறைவேற்றிக்கொள்வது
பாதிப்பையே ஏற்படுத்தும். விருப்பங்களும், தேவைகளுக்குமான
வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
கடனை அடைக்க கடன்: மோசமான காரணங்களுக்காக, கடன் வாங்கும்
பழக்கம் இருந்தால், கடன் சுமை அதிகமாகி, கடனை அடைக்க கடன் வாங்கும்
நிலை ஏற்படலாம். கடன் வாங்கி கடனை அடைப்பதை தவிர்க்க வேண்டும். அவசர
கால நிதியை உருவாக்குவதன் மூலம், எதிர்பாரா தேவைகளை சமாளிக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|