பதிவு செய்த நாள்
05 மார்2019
23:35
புதுடில்லி:‘‘அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு வழங்கி வரும் வரி விலக்கு சலுகையை திரும்பப் பெற்றாலும், அதனால் நம் ஏற்றுமதி பாதிக்காது,’’ என, மத்திய வர்த்தக துறை செயலர், அனுப் வாதவான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜி.எஸ்.பி., திட்டத்தின் கீழ், இந்தியாவின் ரசாயனம், பொறியியல் உள்ளிட்ட, 1,900 பொருட்கள் இறக்குமதிக்கு, வரி விலக்கு சலுகை வழங்குகிறது.இந்நிலையில், அமெரிக்கா, அதன் மருத்துவ உபகரணங்கள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு, வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தது. அதை இந்தியா ஏற்காததால், ஜி.எஸ்.பி., அந்தஸ்தை திரும்பப் பெறுவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து, அனுப் வாதவான் கூறியதாவது:இந்தியா, அமெரிக்காவுக்கு, ஆண்டுக்கு, 560 கோடி டாலர் மதிப்பிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதில், ஜி.எஸ்.பி., மூலம், 19 லட்சம் டாலர் தான் வரிச் சலுகையாக கிடைக்கிறது.அதனால், அமெரிக்கா, ஜி.எஸ்.பி., அந்தஸ்தை திரும்பப் பெற்றாலும், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்தியா அதிக வரி விதிப்பதாக, அமெரிக்கா கூறுகிறது. அதில் உண்மையில்லை. உலக வர்த்தக அமைப்பு நிர்ணயித்துஉள்ள விதிமுறைகளுக்கு ஏற்பவே, இந்தியாவில் இறக்குமதி வரி விதிப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|