அமெரிக்காவின் சலுகை பறிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்காது அமெரிக்காவின் சலுகை பறிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்காது ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
எழுச்சி காண துவங்கியது சேவைகள் துறைபுதிய ஆர்டர், வேலைவாய்ப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2019
23:41

புதுடில்லி:இந்தாண்டு துவக்கத்தில், மந்தகதியில் இருந்த சேவைகள் துறை, பிப்ரவரியில் எழுச்சி கண்டுள்ளது. இத்துறை நிறுவனங்களுக்கு, புதிய, ‘ஆர்டர்’கள் அதிக அளவில் கிடைத்துள்ளதால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.


இது குறித்து, தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், நிக்கி – மார்க்கிட் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.


பணியாளர் சேர்க்கை



அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜனவரியை விட, பிப்ரவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது, இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.5 புள்ளிகளாக உயர்ந்திருப்பதில் இருந்து, தெரிய வந்துள்ளது.ஜனவரியில், சேவைகள் துறை வளர்ச்சி குறித்த குறியீடு, 52.2 புள்ளிகள்; 2018, டிசம்பரில், 53.7 புள்ளிகளாக காணப்பட்டது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால், அது, வளர்ச்சியை குறிக்கும்.


இதன்படி, சேவைகள் துறை, தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது. சேவை துறை நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, புதிய ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இதனால், உற்பத்தி உயர்ந்துள்ளது.அதற்கேற்ப, நிறுவனங்களில் பணியாளர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரியில், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


தயாரிப்பு


மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், ‘என்.ஐ.சி., -– பி.எம்.ஐ.ஓ.,’ குறியீடு, 53.8 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜனவரியில், 53.6 புள்ளிகளாக இருந்தது.தனியார் துறையில், உற்பத்தி அதிகரித்துள்ளது.


சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், தேவை குறைவு போன்றவற்றுக்கு இடையே, தயாரிப்பு துறைக்கு, புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன.குறிப்பாக, சீனா, பிரேசில், ரஷ்யா போன்ற வளரும் நாடுகளை விட, இந்திய தயாரிப்பு துறை, அதிக வர்த்தக வாய்ப்புகளை பெற்றுள்ளது.அதேசமயம், பொருட்களின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என, ஆய்வில் பங்கேற்ற, 97 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன.


சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் கட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக, அவை, பொருட்கள் விலையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் வலுவடையும்


நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டில், ஜூலை – செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டிற்கு பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வலுவடைந்து வருகிறது. இதற்கு, தயாரிப்பு துறையின் பங்களிப்பு துணை புரிந்துள்ளது. இத்துறை, 14 மாதங்கள் காணாத வளர்ச்சியை கண்டுள்ளது. அதனால், நடப்பு, ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

பாலியனா டி லிமா


முதன்மை பொருளாதார வல்லுனர்

ஐ.எஸ்.எஸ்., மார்க்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)