பதிவு செய்த நாள்
06 மார்2019
10:36
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 6, காலை 9.15மணி) சிறிய அளவிலான ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 10.30 மணியளவில் மேலும் உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.87 புள்ளிகள் உயர்ந்து 36,500.41ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 25.45 புள்ளிகள் உயர்ந்து 11,012.90ஆகவும் வர்த்தகமாகின.
முன்னணி நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.70.60ஆக வர்த்தகமானது. இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்தது. இருப்பினும் காலை 10.30 மணியளவில் 1 காசுகள் சரிந்து ரூ.70.49ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|