பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...  மின்னணு கொள்கை  திட்டமிட்டபடி அமலாகுமா? மின்னணு கொள்கை திட்டமிட்டபடி அமலாகுமா? ...
‘இ – சேவை’ மையங்களை குறைக்க அரசு திட்டமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2019
23:22

‘தனியார் இணையதள மையங்களுக்கு, அரசின் சேவைகளை வழங்க அனுமதி வழங்கியதை அடுத்து, அரசு கேபிள், ‘டிவி’ நடத்தும், ‘இ – சேவை’ மையங்கள் படிப்படியாக குறைக்கப்படுமா?’ என, கேள்வி எழுந்துள்ளது.


மத்திய – மாநில அரசுகளின் சேவைகளை பெற, டி.என்.இ.ஜி.ஏ., எனும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ வழியாக, அரசு இ – சேவை மையத்தை செயல்படுத்தி வருகிறது.அரசு இ – சேவை மையத்தில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், வண்ண வாக்காளர் அட்டை அச்சிடுதல் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.


இந்நிலையில், அரசு சேவைகளை வழங்க, 500 தனியார் இணையதள மையங்களுக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ‘அரசு இ – சேவை மையங்களை குறைக்க திட்டம் இருக்கிறதா?’ என, கேள்வி எழுந்துள்ளது.


இது குறித்து, அரசு கேபிள், ‘டிவி’ அதிகாரிகள் கூறியதாவது:அரசு இ – சேவை மையங்களில், தாலுகா அளவிலான மையங்களை தவிர, இதர மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், திங்கட்கிழமை மட்டும் மக்கள் வருகின்றனர்.


இதனால், செலவுக்கேற்ற வருவாய் கிடைக்கவில்லை. மேலும், அரசு இ – சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சரியாக வேலை செய்வதில்லை. மக்களுக்கு சரியான பதில் அளிப்பதில்லை என்ற புகார்களும் அடிக்கடி வருகின்றன. ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதே நிலை நீடித்தால், அரசு இ – சேவை மையங்களை குறைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)