பதிவு செய்த நாள்
06 மார்2019
23:22
‘தனியார் இணையதள மையங்களுக்கு, அரசின் சேவைகளை வழங்க அனுமதி வழங்கியதை அடுத்து, அரசு கேபிள், ‘டிவி’ நடத்தும், ‘இ – சேவை’ மையங்கள் படிப்படியாக குறைக்கப்படுமா?’ என, கேள்வி எழுந்துள்ளது.
மத்திய – மாநில அரசுகளின் சேவைகளை பெற, டி.என்.இ.ஜி.ஏ., எனும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ வழியாக, அரசு இ – சேவை மையத்தை செயல்படுத்தி வருகிறது.அரசு இ – சேவை மையத்தில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், வண்ண வாக்காளர் அட்டை அச்சிடுதல் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு சேவைகளை வழங்க, 500 தனியார் இணையதள மையங்களுக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ‘அரசு இ – சேவை மையங்களை குறைக்க திட்டம் இருக்கிறதா?’ என, கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, அரசு கேபிள், ‘டிவி’ அதிகாரிகள் கூறியதாவது:அரசு இ – சேவை மையங்களில், தாலுகா அளவிலான மையங்களை தவிர, இதர மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், திங்கட்கிழமை மட்டும் மக்கள் வருகின்றனர்.
இதனால், செலவுக்கேற்ற வருவாய் கிடைக்கவில்லை. மேலும், அரசு இ – சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சரியாக வேலை செய்வதில்லை. மக்களுக்கு சரியான பதில் அளிப்பதில்லை என்ற புகார்களும் அடிக்கடி வருகின்றன. ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதே நிலை நீடித்தால், அரசு இ – சேவை மையங்களை குறைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|