பதிவு செய்த நாள்
12 மார்2019
23:29
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், நாட்டின் சில்லரை பணவீக்கம், மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 2.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 2.05 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. இதனால், சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது.எனினும், தொடர்ந்து ஏழு மாதங்களாக, சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீத அளவிற்குள் உள்ளது.ரெப்போ வட்டிரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது.
சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், கடந்த மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ‘ரெப்போ’ வட்டியை, 6.5 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.தொழில் துறைஇந்தாண்டு ஜனவரியில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2018, டிசம்பரில், 2.4 சதவீதமாக இருந்தது.
இதே காலத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தியை குறிக்கும் குறியீடு, 2.7 சதவீதத்தில் இருந்து, 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.தயாரிப்பு துறையில், 23 தொழில்களில், 11 பிரிவு களின் வளர்ச்சி, மதிப்பீட்டு மாதத்தில் உயர்ந்து இருந்தது.நாட்டின் தொழில் துறையில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 77 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|