பதிவு செய்த நாள்
13 மார்2019
23:36
திருப்பூர்:‘வரத்து குறைவால், பருத்தி பஞ்சு விலை உயரத் துவங்கியுள்ளது; இதனால், நுால் விலையும் உயரும்’ என, தமிழக நுாற்பாலை துறையினர் தெரிவிக்கின்றனர்.
துவக்கத்தில், 1 கேண்டி, 356 கிலோ பஞ்சு கொள்முதல் விலை, 45 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்தது; படிப்படியாக உயர்ந்து, சில நாட்களிலேயே, 46 ஆயிரத்து, 500 ரூபாயை எட்டியது. வரத்து அதிகரித்ததால், கடந்த ஜனவரியில், 44 ஆயிரம் ரூபாயாக குறைந்தது; அதனால், நுால் விலையை கிலோவுக்கு, 10 ரூபாய், தமிழக நுாற்பாலைகள் குறைத்தன.
கடந்த பிப்., மாதம், 42 ஆயிரம் ரூபாயாக, விலை மேலும் குறைந்தது. தொடர்ந்து பஞ்சு விலை படிப்படியாக சரிவை நோக்கியே செல்லும் என்றே நுாற்பாலை துறையினர் எதிர்பார்த்தனர். தற்போது வரத்து குறைய ஆரம்பித்திருப்பதால், பஞ்சு விலை உயரத் துவங்கியுள்ளது. கடந்த, 10 நாட்களில், கேண்டிக்கு, 2,000 ரூபாய் உயர்ந்து, 44 ஆயிரத்தை எட்டியுள்ளது.
நுாற்பாலைகளை வந்தடையும்போது, 46 ஆயிரமாகிறது.‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:பஞ்சு ஏற்றுமதிக்கு, சீனாவில் இருந்து அதிக வர்த்தக வாய்ப்புகள் வருகின்றன. ஏற்றுமதி வர்த்தக வாய்ப்பு, கூடுதல் விலையை எதிர்பார்த்து, அரவை ஆலைகள், வர்த்தகர்கள், பஞ்சு இருப்பை அதிகரித்து வருகின்றனர்.
இக்காரணங்களால், உள்நாட்டு வர்த்தகத்துக்கு, பஞ்சு வரத்து குறைந்துள்ளது; விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. புதிய சீசன் துவங்க, இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அதனால், அடுத்தடுத்த மாதங்களில் விலை உயர்வை நோக்கியே செல்லும் என, கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|