‘ஈஸ்டர்’ விரதம் எதிரொலி முட்டை விலை சரிவு ‘ஈஸ்டர்’ விரதம் எதிரொலி முட்டை விலை சரிவு ...  ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு அனுமதிதலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு அனுமதிதலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் ...
வர்த்தகம் » ஜவுளி
பஞ்சு விலை அதிகரிப்பு நூல் விலை உயருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2019
23:36

திருப்பூர்:‘வரத்து குறைவால், பருத்தி பஞ்சு விலை உயரத் துவங்கியுள்ளது; இதனால், நுால் விலையும் உயரும்’ என, தமிழக நுாற்பாலை துறையினர் தெரிவிக்கின்றனர்.


துவக்கத்தில், 1 கேண்டி, 356 கிலோ பஞ்சு கொள்முதல் விலை, 45 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்தது; படிப்படியாக உயர்ந்து, சில நாட்களிலேயே, 46 ஆயிரத்து, 500 ரூபாயை எட்டியது. வரத்து அதிகரித்ததால், கடந்த ஜனவரியில், 44 ஆயிரம் ரூபாயாக குறைந்தது; அதனால், நுால் விலையை கிலோவுக்கு, 10 ரூபாய், தமிழக நுாற்பாலைகள் குறைத்தன.


கடந்த பிப்., மாதம், 42 ஆயிரம் ரூபாயாக, விலை மேலும் குறைந்தது. தொடர்ந்து பஞ்சு விலை படிப்படியாக சரிவை நோக்கியே செல்லும் என்றே நுாற்பாலை துறையினர் எதிர்பார்த்தனர். தற்போது வரத்து குறைய ஆரம்பித்திருப்பதால், பஞ்சு விலை உயரத் துவங்கியுள்ளது. கடந்த, 10 நாட்களில், கேண்டிக்கு, 2,000 ரூபாய் உயர்ந்து, 44 ஆயிரத்தை எட்டியுள்ளது.


நுாற்பாலைகளை வந்தடையும்போது, 46 ஆயிரமாகிறது.‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:பஞ்சு ஏற்றுமதிக்கு, சீனாவில் இருந்து அதிக வர்த்தக வாய்ப்புகள் வருகின்றன. ஏற்றுமதி வர்த்தக வாய்ப்பு, கூடுதல் விலையை எதிர்பார்த்து, அரவை ஆலைகள், வர்த்தகர்கள், பஞ்சு இருப்பை அதிகரித்து வருகின்றனர்.


இக்காரணங்களால், உள்நாட்டு வர்த்தகத்துக்கு, பஞ்சு வரத்து குறைந்துள்ளது; விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. புதிய சீசன் துவங்க, இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அதனால், அடுத்தடுத்த மாதங்களில் விலை உயர்வை நோக்கியே செல்லும் என, கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)