பதிவு செய்த நாள்
29 மார்2019
00:16
தமிழ்நாடு வணிகவரி துறையின் செயல்பாடுகள் முழுவதையும், ஆன்லைனுக்கு மாற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரக்குகளை எடுத்து செல்ல ஆன்லைன் வாயிலாக அனுமதி பெறும்‘இ – வே’ பில் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டம் வந்த பின், அனைத்து நடவடிக்கைகளும், காகிதமில்லா பரிவர்த்தனையாக மாற்றப்பட்டன. இதே போன்று, தமிழ்நாடு வணிக வரி துறையிலும், நடவடிக்கைகள் அனைத்தும், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
இது குறித்து, வணிகவரி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,க்கு பின், வணிக வரியின் செயல்பாடுகள் அனைத்தையும், ஆன்லைனுக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்டர்நெட் பிரச்னையால் ஆன்லைனுக்கு மாற்றும் பணியில் மந்தம் நிலவியது.
தற்போது, வாகன சோதனை, பறிமுதல் செய்யப்படும் பொருட்கள், அதன் மீதான நடவடிக்கை, வணிகர்களின் செயல்பாடுகள், அவர்களின் விபரங்கள் என அனைத்தையும், ஆன்லைனுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு, மார்ச் 31ம் வரை அவசாகம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|