பதிவு செய்த நாள்
04 ஏப்2019
23:58
புதுடில்லி:கடந்த, மார்ச்சில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு தொய்வடைந்துள்ளது.
‘நிக்கி – மார்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 52 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது.இது, பிப்ரவரியில், 52.5 புள்ளிகளாக இருந்தது.எனினும், 50க்கும் மேற்பட்ட புள்ளிகள், வளர்ச்சியை குறிப்பதால், சேவைகள் துறை, தொடர்ந்து, 10 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனங்களுக்கு புதிய, ‘ஆர்டர்’கள் குறைந்ததால், அவை, பணிக்கு அமர்த்திய ஆட்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, செப்டம்பருக்கு பின், சேவைகள் துறை, மிகக் குறைவான வளர்ச்சியை கண்டு உள்ளது.மார்ச்சில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.சி., – பி.எம்.ஐ.ஓ., குறியீடு, 52.7 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரியில், 53.8 புள்ளிகளாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|