பதிவு செய்த நாள்
12 ஏப்2019
11:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஏப்., 12, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 106.69 புள்ளிகள் உயர்ந்து 38,713.70ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 21.75 புள்ளிகள் உயர்ந்து 11,618.45ஆகவும் வர்த்தகமாகின. டிசிஎஸ்., இன்போசிஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதும், ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து ரூ.69.24ஆகவும் வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|