பதிவு செய்த நாள்
20 ஏப்2019
05:22
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பால் கிடைத்த பயனை, ‘டிவி’ வாங்குவோருக்கு வழங்காதது ஏன் என, விளக்கம் அளிக்கும்படி, ‘சாம்சங்’ நிறுவனத்திற்கு, மிகை லாப தடுப்பு இயக்குனரகம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
இது குறித்து, இந்த இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனங்கள் தயாரிக்கும், 26 அங்குல, ‘டிவி’க்களுக்கு, 18 சதவீதம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.கடந்த, 2018 டிசம்பரில், 32 அங்குல, ‘டிவி’க்களுக்கு விதிக்கப்பட்ட, 28 சதவீத, ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, இந்தாண்டு, ஜனவரி, 1ல் அமலுக்கு வந்தது.
ஒத்துழைப்பு:
ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பெறும் பயனை, சட்டப்படி, தயாரிப்பு நிறுவனங்கள், நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அதாவது, பொருட்கள் விலையை குறைக்க வேண்டும்.ஆனால், சாம்சங் நிறுவனம், 32 அங்குல, ‘டிவி’யின், ஜி.எஸ்.டி.,குறைப்பால் பெற்ற பயனை, நுகர்வோருக்கு வழங்கவில்லை என, நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில், குறைக்கப்பட்ட, ஜி.எஸ்.டி.,யால் கிடைத்த பயனை, நுகர்வோருக்கு, ‘டிவி’ விலை குறைப்பின் மூலம் ஏன் வழங்கவில்லை எனக் கேட்டு, மிகை லாப தடுப்பு ஆணையம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
அதில், ‘டிவி’ விற்பனை தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதையடுத்து, சாம்சங் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, ‘ஜி.எஸ்.டி., குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்கும் நோக்கத்தில், ‘டிவி’ விலை குறைக்கப்பட்டுள்ளது.
‘இது தொடர்பாக, மிகை லாப தடுப்பு ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும்’ என, சாம்சங் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|