7 நிறுவனங்கள் மீது புகார் 7 நிறுவனங்கள் மீது புகார் ...  நிறுவனங்கள் பதிவுக்கு ஒற்றை சாளர முறை; தொழில் துவங்க, 3 நாட்களில் அரசு அமைப்புகள் ஒப்புதல் நிறுவனங்கள் பதிவுக்கு ஒற்றை சாளர முறை; தொழில் துவங்க, 3 நாட்களில் அரசு ... ...
‘சென்செக்ஸ்’ 495 புள்ளிகள் சரிவு; அமெரிக்காவின் அச்சுறுத்தல் எதிரொலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
23:40

மும்பை: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அளித்த சலுகையை, அமெரிக்கா ரத்து செய்யப் போவதாக தகவல் வெளியானதால், நேற்று, இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.

ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும், இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள, அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இந்த சலுகையை, அமெரிக்கா, மே, 2ல் ரத்து செய்ய உள்ளதாக, நேற்று தகவல் வெளியானது. இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 2.56 சதவீதம் உயர்ந்து, 73.81 டாலராக அதிகரித்துள்ளது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 495.10 புள்ளிகள் சரிவடைந்து, 38,645.18 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 158.35 புள்ளிகள் குறைந்து, 11,594.45 புள்ளிகளில் நிலை பெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 28 காசுகள் சரிவடைந்து, 69.63 ஆக குறைந்தது.ஒரு சில நிறுவனங்களின், நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கைகளும், சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இல்லாததால், பங்குகள் விலை குறைந்து கைமாறின.

வர்த்தகம் பாதிக்கும் அபாயம்:
ஈரானில் இருந்து, இந்தியாவும், சீனாவும் அதிக அளவில், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. அமெரிக்காவின் உத்தரவை மீறி, ஈரானில் இருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், அந்நாட்டுடன் இந்தியா, சீனா மேற்கொண்டு வரும் வர்த்தகம் பாதிக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)