பதிவு செய்த நாள்
30 ஏப்2019
23:17
புதுடில்லி : இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட, ஆறு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், ஐந்து நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீட்டின் மீது, அதிகபட்சமாக, 21 சதவீத வருவாய் கிடைத்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் பங்குகள், ஏப்., 11ல், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், பட்டியலிடப்பட்டன. இந்நிறுவன பங்கின் விலை, தேசிய பங்குச் சந்தையில், 21.31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல, ஏப்., 16ல் பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்ற, பாலிகேப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை, 19.94 சதவீதம் உயர்ந்துள்ளது.
சாலெட் ஓட்டல்ஸ் நிறுவனத்தின் பங்கு, அதன் வெளியீட்டு விலையை விட, 14.64 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸெல்ப்மக் டிசைன் அண்டு டெக் நிறுவனத்தின் பங்கு விலை, 7.57 சதவீதம் உயர்ந்துள்ளது. மேற்கண்ட இரு நிறுவனங்களும், பிப்ரவரி துவக்கத்தில், பங்கு வெளியீட்டில் களமிறங்கின.மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகள், ஏப்., 15ல், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. இப்பங்கின் விலை, 6.82 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேசமயம், எம்.எஸ்.டி.சி., நிறுவனத்தின் பங்கு, அதன் வெளியீட்டு விலையை விட, 11.66 சதவீதம் குறைந்து, வர்த்தகமாகி வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டு காலத்தை நீட்டித்து, பங்கு விலையை மாற்றி அமைத்தது. இருந்தும், இதன் பங்கு விலை சரிவடைந்துள்ளது. நியோஜென் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, கடந்த வாரம், வெள்ளியுடன் முடிவடைந்தது. விரைவில் இந்நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலில் இடம் பெற உள்ளன.இந்தாண்டு, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 8.23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|