பதிவு செய்த நாள்
01 மே2019
23:31
நியூயார்க்:‘‘எங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு, இந்திய சந்தையில் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையில் வலுவாக காலுான்ற திட்டமிட்டுள்ளோம்,’’ என, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டிம் குக் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தை, குறுகிய கால அளவில் நிறுவனத்திற்கு கடுமையான சவால் விடுப்பதாக உள்ளது. இருந்தாலும், நீண்ட கால அளவில், எங்களுக்கு அது மிக முக்கியமான சந்தை. நாங்கள் அச்சந்தையில் ஏராளமானவற்றை கற்று வருகிறோம்.ஒரு சிலவற்றில் விட்டுக் கொடுத்து செயல்பட்டு, நல்ல பலனை கண்டுள்ளோம்.
இந்தியாவில் ஆப்பிள், ‘ஐபோன்’ தயாரிப்பு துவங்கியுள்ளது. அடுத்து, சில்லரை விற்பனையிலும் தீவிரமாக களமிறங்க உள்ளோம். இதற்காக, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், நாடு முழுவதும் சில்லரை விற்பனை கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம், இந்தியாவில், ‘ஐபோன் – எக்ஸ்ஆர்’ விலையை, 22 சதவீதம் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|