மீண்டும் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு; மத்திய அரசு பரிசீலனை மீண்டும் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு; மத்திய அரசு பரிசீலனை ...  தயாரிப்பு துறை வளர்ச்சியில் மந்தநிலை லோக்சபா தேர்தல் எதிரொலி தயாரிப்பு துறை வளர்ச்சியில் மந்தநிலை லோக்சபா தேர்தல் எதிரொலி ...
ஜி.எஸ்.டி., வருவாயில் புதிய சாதனை:முதன் முறையாக ரூ.1.13 லட்சம் கோடியை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2019
23:34

புதுடில்லி:கடந்த ஏப்ரலில், ஜி.எஸ்.டி., வருவாய், முதன் முறையாக, 1.13 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு, 2019 -– 20ம் நிதியாண்டில், ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.டி., மூலம், 1 லட்சத்து, 13 ஆயிரத்து, 865 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, மார்ச்சில், 1 லட்சத்து, 6,577 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த, 2017 ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமான பின், முதன் முறையாக, ஏப்ரலில் தான், மிக அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 2018 ஏப்ரலை விட, இந்தாண்டு ஏப்ரலில், 10.05 சதவீதம் வசூல் கூடியுள்ளது.

பங்கீடு

கடந்த ஏப்ரலில் ஈட்டிய மொத்த, ஜி.எஸ்.டி., யில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி.,யின் பங்கு, 21 ஆயிரத்து, 163 கோடி ரூபாய்.மாநில அரசுகளின், எஸ்.ஜி.எஸ்.டி.,யின் பங்கு, 28 ஆயிரத்து, 801 கோடி ரூபாய். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த, ஐ.ஜி.எஸ்.டி.,யின் பங்கு, 54 ஆயிரத்து, 733 கோடி ரூபாய். இத்துடன், கூடுதல் வரி மூலம், 9,168 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

ஐ.ஜி.எஸ்.டி., வசூலில், மத்திய அரசுக்கு, 20 ஆயிரத்து, 370 கோடி ரூபாய்; மாநில அரசுகளுக்கு, 15 ஆயிரத்து, 975 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், ஐ.ஜி.எஸ்.டி., இருப்பில் இருந்து, தற்காலிகமாக, 12 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய, மாநில அரசுகளுக்கு அளிக்கப் பட்டு உள்ளது. இத்தொகையை, மத்திய, மாநில அரசுகள் சரி பாதியாக பங்கிட்டுக் கொண்டுள்ளன.

இந்த வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மொத்தமாக, முறையே, 47 ஆயிரத்து, 533 கோடி ரூபாய் மற்றும் 50 ஆயிரத்து, 776 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.மார்ச் மாத விற்பனை தொடர்பான, ‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ கணக்கை, ஏப்., 30 நிலவரப்படி, 72.13 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்வு

கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வசூல், பட்ஜெட் மறுமதிப்பீட்டை விட அதிகரித்து, 11.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதில், மத்திய அரசின் சி.ஜி.எஸ்.டி., மூலம், 4.25 லட்சம் கோடி ரூபாய்; இழப்பீட்டிற்கான கூடுதல் வரி வாயிலாக, 97 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டில், சி.ஜி.எஸ்.டி., மூலம், 6.10 லட்சம் கோடி ரூபாய்; இழப்பீடு வரி வாயிலாக, 1.01 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கவும், ஐ.ஜி.எஸ்.டி., இருப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., வரி விகிதங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, தொடர்ந்து வருவாய் உயர்ந்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)