பதிவு செய்த நாள்
02 மே2019
23:34
புதுடில்லி:கடந்த ஏப்ரலில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. லோக்சபா தேர்தல் காரணமாக, இந்த தொய்வு ஏற்பட்டுஉள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள், வணிக கொள்கைகள் சார்ந்த செயல்பாடுகளை, தேர்தல் முடிவை எதிர்பார்த்து தள்ளி வைத்துள்ளன.பிரிட்டனைச் சேர்ந்த, ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஏப்ரல் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுஉள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டு ஏப்ரலில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 51.8 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது மார்ச்சில், 52.6 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். அதன்படி, தொடர்ந்து, 21 மாதங்களாக, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி கண்டு வருகிறது.அதேசமயம், 2018 ஆகஸ்டிற்கு பின், ஏப்ரலில் தான், வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது. புதிய, ‘ஆர்டர்’கள் குறைந்த அளவிற்கே கிடைத்ததால், உற்பத்தி குறைந்துள்ளது.
செலவினம்
மதிப்பீட்டு மாதத்தில், மூலப்பொருட்கள் செலவு அடிப்படையிலான பணவீக்கம், 43 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உற்பத்தி செலவினம் குறைந்துள்ள போதிலும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி தொய்வடைந்து உள்ளது.இதனால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ விகிதத்தை மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளது.இது குறித்த அறிவிப்பு, ஜூன் 3 – 6ல் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் கூட்டத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|