தனி நபர் கடன் ரூ.60,000 வரை தள்ளுபடி:குறைந்த வருவாய் பிரிவினருக்கு வருது புதிய திட்டம் தனி நபர் கடன் ரூ.60,000 வரை தள்ளுபடி:குறைந்த வருவாய் பிரிவினருக்கு வருது ... ...  முதலீட்டாளர்களுக்கு வழக்கு செலவு நிதி :நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோருக்கு  நிவாரணம் முதலீட்டாளர்களுக்கு வழக்கு செலவு நிதி :நிறுவனத்தால் ... ...
வரி ஏய்ப்பை தடுக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2019
00:19

முறையான ஆவணங்கள் மற்றும் ‘இ – வே’ பில் இல்லாமல், சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை சோதனையிடுவதற்கு, தனியார் வாகனங்களை பயன்படுத்த, வணிக வரித் துறை திட்டமிட்டுள்ளது.



மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்லவும், மாநிலத்துக்கு உள்ளே, சரக்குகளை எடுத்துச் செல்லவும், இ – வே பில் பெறும் முறை, கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் அனைத்துப் பொருட்களுக்கும், இ – வே பில் கட்டாயம் பெற வேண்டும். சரக்கு வாகனங்களை சோதனை செய்யும் பணியை, வணிக வரித் துறையின் செயலாக்கப் பிரிவில் உள்ள, ரோந்து குழுக்கள் மேற்கொள்கின்றன.



இந்நிலையில், சரக்கு வாகனங்களை சோதனையிட, தனியார் கார்களை வணிக வரித் துறை வாடகைக்கு அமர்த்தி உள்ளது.இது குறித்து, இத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆவணங்கள் மற்றும் இ – வே பில் இல்லாத லாரிகளை, புறநகர் பகுதிகளில் நிறுத்தி, ரோந்து குழுக்கள் சோதனை செய்வர். ரோந்து குழுக்கள் அரசு வாகனங்களை பயன்படுத்துவதால், முறைகேடுகளில் ஈடுபடும் சரக்கு வாகனங்கள், தங்களது வழிகளை மாற்றி, வேறு பாதையில் செல்கின்றன.



மேலும், ரோந்து பணியில், குறிப்பிட்ட அதிகாரிகள் மட்டும் தொடர்வதால், முறைகேடுகளில் ஈடுபடும் சரக்கு வாகனங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விடுகின்றனர்.இதனால், தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. ரோந்து அதிகாரிகள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர். இதனால், வரி ஏய்ப்பு தடுக்கப்படும்.


– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)