பதிவு செய்த நாள்
08 மே2019
00:19
முறையான ஆவணங்கள் மற்றும் ‘இ – வே’ பில் இல்லாமல், சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை சோதனையிடுவதற்கு, தனியார் வாகனங்களை பயன்படுத்த, வணிக வரித் துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்லவும், மாநிலத்துக்கு உள்ளே, சரக்குகளை எடுத்துச் செல்லவும், இ – வே பில் பெறும் முறை, கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் அனைத்துப் பொருட்களுக்கும், இ – வே பில் கட்டாயம் பெற வேண்டும். சரக்கு வாகனங்களை சோதனை செய்யும் பணியை, வணிக வரித் துறையின் செயலாக்கப் பிரிவில் உள்ள, ரோந்து குழுக்கள் மேற்கொள்கின்றன.
இந்நிலையில், சரக்கு வாகனங்களை சோதனையிட, தனியார் கார்களை வணிக வரித் துறை வாடகைக்கு அமர்த்தி உள்ளது.இது குறித்து, இத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆவணங்கள் மற்றும் இ – வே பில் இல்லாத லாரிகளை, புறநகர் பகுதிகளில் நிறுத்தி, ரோந்து குழுக்கள் சோதனை செய்வர். ரோந்து குழுக்கள் அரசு வாகனங்களை பயன்படுத்துவதால், முறைகேடுகளில் ஈடுபடும் சரக்கு வாகனங்கள், தங்களது வழிகளை மாற்றி, வேறு பாதையில் செல்கின்றன.
மேலும், ரோந்து பணியில், குறிப்பிட்ட அதிகாரிகள் மட்டும் தொடர்வதால், முறைகேடுகளில் ஈடுபடும் சரக்கு வாகனங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விடுகின்றனர்.இதனால், தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. ரோந்து அதிகாரிகள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர். இதனால், வரி ஏய்ப்பு தடுக்கப்படும்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|