பதிவு செய்த நாள்
08 மே2019
00:24
புதுடில்லி:‘மத்திய அரசு, அமெரிக்க நிறுவனங்களுக்கு தடையாக உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, வரியை குறைக்க வேண்டும்’ என, அந்நாட்டு வர்த்தக அமைச்சர், வில்பர் ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர், டில்லியில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பேசியதாவது:இந்தியாவில், அமெரிக்க நிறுவனங்களுக்கு தடையாக உள்ள அம்சங்களை நீக்க வேண்டும். தரவுகளை சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, தரவுகளின் பாதுகாப்பை பலவீனமாக்கி, வர்த்தகம் புரிவதற்கான செலவை அதிகரிக்கச் செய்யும். அதனால், இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு, இந்தியாவில், இறக்குமதி பொருட்களுக்கான சராசரி வரி, 13.8 சதவீதமாக உள்ளது. உதாரணமாக, வாகனங்கள் இறக்குமதிக்கு,60 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்கா, வாகன இறக்குமதிக்கு, 2.5 சதவீத வரி தான் விதிக்கிறது. இந்தியா, மோட்டார் சைக்கிள்களுக்கு, 50 சதவீதம், மதுபானங்களுக்கு, 150 சதவீத வரி விதிப்பதை உதாரணமாக கூறலாம்.
உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி, விவசாய பொருட்களுக்கு, அதிகபட்சம், 113.5 சதவீதம் வரி விதிக்கலாம். ஆனால், இந்தியா, 300 சதவீத வரி விதிக்கிறது. வரியை குறைத்து, வர்த்தக கட்டுப்பாடுகளை இந்தியா நீக்கினால், பரஸ்பர வர்த்தகம் செழிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|