பதிவு செய்த நாள்
10 மே2019
23:21
கடந்த, 2018 - 19ம் நிதியாண்டில், 8,100 கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வணிகத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய வணிகத் துறை வெளியிட்டுள்ள விபரங்கள்:-கடந்த, 2018 - 19ம் நிதியாண்டில், 8,100 கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள், இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுஉள்ளன.இது, 2017 - 18ல், 1,482 கோடி; 2016 - 17ல், 1,199 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
இதே போன்று, 2014ல், மொபைல் போன் உற்பத்தி, ஆண்டுக்கு, 30 லட்சமாக இருந்தது. இது, 2017ல், 1.1 கோடி மொபைல் போனாக அதிகரித்தது.இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி அதிகரித்த பின், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|