பதிவு செய்த நாள்
10 மே2019
23:30
புதுடில்லி:இந்தாண்டு இறுதிக்குள், ‘செட்டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி’ வசதியை அறிமுகப்படுத்த, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, ‘டிராய்’ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மொபைல் போனில், எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங் களை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி, ‘மொபைல் போர்ட்டபிளிட்டி’ எனப்படுகிறது. அதுபோல, விருப்பமான, ‘டிவி’ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க உதவும், ‘செட் டாப் பாக்ஸ்’ சாதனத்தை மாற்றாமல், அதேசமயம் கேபிள் ஆப்பரேட்டர்களின் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி, ‘செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி’ எனப்படுகிறது.
தற்போது, ஒரு பகுதியில், ஒருவர் பயன்படுத்தும், ‘செட் டாப் பாக்ஸ்’ வேறு பகுதியில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதாவது, செட் டாப் பாக்ஸ் மூலம், ‘டிவி’ நிகழ்ச்சிகளை பார்க்கும் ஒரு குடும்பம், வேறு பகுதிக்கு இடம் மாறினால், அந்த செட் டாப் பாக்ஸ் சாதனத்தை பயன்படுத்த முடியாது.குடியேறும் புதிய இடத்தில், மீண்டும் பணம் செலுத்தி, செட் டாப் பாக்ஸ் வாங்கினால் மட்டுமே, ‘டிவி’ நிகழ்ச்சிகளை காண முடியும். இதனால், நுகர்வோருக்கு வீண் செலவு ஏற்படுகிறது.
தேங்கும் செட் டாப் பாக்ஸ் சாதனங்கள் மூலம் பெருகும் மின்னணு கழிவுகள், சுற்றுச் சூழலையும் பாதிக்கின்றன.இதையொட்டி, செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதியை விரைவாக அறிமுகப்படுத்த, ‘டிராய்’ திட்டமிட்டு உள்ளது.இந்த ஆணையம் எடுத்த நடவடிக்கையால், மக்கள் விரும்பிய, ‘டிவி’ சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, சமீபத்தில் அமலுக்கு வந்தது.
அடுத்து, எந்த இடத்திற்கு சென்றாலும், ஒரே செட் டாப் பாக்ஸ் மூலம், அந்த பகுதியில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்களின் சேவையை பெறும் வசதி அறிமுகமாக உள்ளது.இந்த வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து, டிராய், இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது.
போட்டி அதிகரிக்கும்
செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதி தொடர்பாக, டில்லியில் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இதில், கேபிள் ஆப்பரேட்டர்கள், செட் டாப் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், டி.டி.எச்., சேவை நிறுவனங்கள், எம்.எஸ்.ஓ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, சி.ஏ.எஸ்., எனப்படும், செட் டாப் பாக்ஸ் வாயிலாக, நிகழ்ச்சிகளை பதிவிறக்கி பார்க்கும் வசதியை பயன்படுத்தி, போர்ட்டபிளிட்டி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த தொழில்நுட்ப செயலாக்கம் தொடர்பாக, சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கு முன், தொலை தொடர்பு சேவை துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களிடம், ஒட்டுமொத்த கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படும். செட் ஆப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதி, விருப்பமான சேவையை தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கும். பொருளாதார வளர்ச்சிக்கும், போட்டி அதிகரிக்கவும் துணை புரியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|