பதிவு செய்த நாள்
15 மே2019
23:40
புதுடில்லி:மார்ச் இறுதிக்குள், கட்டுமான பணி முடிந்ததற்கான சான்று பெற்ற குடியிருப்பை வாங்குவோர், 12 சதவீத, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தாண்டு, மார்ச், 31க்குள், குடியிருப்பு பணி முடிந்ததற்கான சான்றிதழை பெற்றுள்ள கட்டுமான நிறுவனங்கள், 12 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்கலாம். அக்குடியிருப்பை வாங்குவோரிடம், ஏற்கனவே செலுத்திய தொகையை தவிர்த்து, எஞ்சிய தொகைக்கு, 12 சதவீத, ஜி.எஸ்.டி. வசூலித்துக் கொள்ளலாம்.
இது, ஏப்., 1க்கு முன் வரையிலான கட்டு மான பணி முடிப்பு சான்றிதழ் பெற்ற திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஏப்., 1 முதல், குடியிருப்புக்கு, 5 சதவீதம் மற்றும் குறைந்த விலை குடியிருப்புக்கு, 1 சதவீதம், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி விதிப்பை தேர்வு செய்யும் கட்டுமான நிறுவனங்கள், உள்ளீட்டு வரிப் பயனை பெற முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|