பதிவு செய்த நாள்
28 மே2019
07:04
புதுடில்லி: ‘இனி, ஊதியம் ஒழுங்காக வழங்கப்படும்’ என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, கடந்த பிப்ரவரியில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கலை சந்தித்தது.இதையடுத்து, மத்திய அரசு, இந்நிறுவனத்திற்கு, 3,500 கோடி ரூபாய் வங்கி உத்தரவாத கடன் பெற, ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், 1,500 கோடி ரூபாய் கடன் பெற, பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தலைவர், அனுபம் ஸ்ரீவத்சவா பேசியதாவது: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், குறுகிய கால கடனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். இது தவிர, எஞ்சிய, 2,000 கோடி ரூபாய், இதர வங்கிகளிடம், ஜூலையில் பெறப்படும்.இத்துடன், மொபைல் போன், பிராட்பேண்ட் உள்ளிட்ட சேவைகள் வாயிலான வருவாயும் கிடைக்கும். இதன் மூலம், 1.68 லட்சம் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம், குறிப்பிட்ட நாளில் வழங்கப்படும். இனி, ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|