பதிவு செய்த நாள்
31 மே2019
07:15
சென்னை: மோட்டார் வாகன பொறியியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும், 12வது, ‘ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங்’ கண்காட்சி, சென்னையில் நடைபெற உள்ளது.
இது குறித்து, ‘மெஸ்சி பிராங்க்பர்ட்’ என்ற உலக வர்த்தக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெஸ்சி பிராங்க்பர்ட் சார்பில், ஆண்டு தோறும் வாகன பொறியியல் தொழில்நுட்ப கண்காட்சி நடத்தப்படும். கடந்த ஆண்டு மும்பையில் நடந்தது; இந்த ஆண்டு, சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.சென்னையில், 12வது மோட்டார் வாகன பொறியியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும், ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சி, ஜூலை 4 முதல், 6ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. இதில், ‘பாமர் இந்தியா, பாரத் போர்ஜ்’ உட்பட, உலக அளவில் பிரபலமாக உள்ள, 85 நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|