பதிவு செய்த நாள்
03 ஜூன்2019
18:04
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ரிசர்வ் வங்கியின் மாதாந்திர நிதிநிலை ஆய்வுக்கூட்டம் துவங்கி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக்கூட்டத்தின் முடிவில் வங்கி வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என தெரிகிறது. இதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இன்றைய வர்ததகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பமாகின.
சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கிய நிலையில், ரூபாயின் மதிப்பும் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் காணப்பட்டன. இறுதியாக வர்த்தகநேர முடிவில் புதிய உச்சத்துடன் நிறைவு செய்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 553 புள்ளிகள் உயர்ந்து 40,267.62ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 166 புள்ளிகள் உயர்ந்து 12,088.55ஆகவும் நிறைவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|