பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
00:20
மும்பை,:வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள், புதிய வரலாற்று உச்சத்தை தொட்டன.
நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ’சென்செக்ஸ்’ குறியீடு, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 40,308.90 புள்ளிகளை எட்டி, சாதனை படைத்தது. எனினும், வர்த்தகத்தின் இறுதியில் சரிவடைந்து, 40,267.62 புள்ளிகளில் நிலை கொண்டது.இதே போல, தேசிய பங்குச் சந்தையின், ’நிப்டி’ குறியீடு, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 12,103.05 புள்ளிகளை எட்டியது. இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில் சரிவடைந்து, 12,088.55 புள்ளிகளில் நிலை கொண்டது.
நாட்டின், ஜி.டி.பி., வளர்ச்சி சரிவு, வாகன விற்பனை சரிவு, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளையும் மீறி, சென்செக்ஸ், 553.42 புள்ளிகளும், நிப்டி, 165.75 புள்ளிகளும் உயர்ந்து, சாதனை படைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.நேற்று முதல் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தின் முடிவில், வட்டிவிகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, சந்தை உயர்ந்ததாக, நிபுணர்கள் தெரிவித்தனர்.நிதிக் கொள்கை குழு, வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பினை, வியாழக்கிழமை அன்று வெளியிட இருக்கிறது.மேலும், டாலருக்கு எதிராக அதிகரித்து வரும், இந்திய ரூபாயின் மதிப்பும், சந்தை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.அமெரிக்க அரசு, கச்சா எண்ணெய் சம்பந்தமாக, ஈரானுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்ததும், கச்சா எண்ணெய் விலை, ஒரு சதவீதம் அளவுக்கு குறைந்தது. இது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவும், இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பும், அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தினாலும் சந்தை உயர்வினை கண்டது.ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க், எச்.யு.எல்., மாருதி ஆகிய பங்குகள் நேற்று உயர்வை சந்தித்தன.இருப்பினும், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், என்.டி.பி.சி., ஐ.டி.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள், சிறிய சரிவினை சந்தித்தன.சந்தையின் இந்த உயர்வு காரணமாக, நேற்று மட்டும், மூதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு, 1.76 லட்சம் ரூபாய் உயர்ந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|