பதிவு செய்த நாள்
01 ஜூலை2019
07:18
வங்கிச் சேவை தொடர்பான புகார்களை அளிக்க, ரிசர்வ் வங்கி அண்மையில் அறிமுகம் செய்துள்ள கடன் மேலாண்மை அமைப்பு வசதியை பயன்படுத்தும் வழிமுறை வருமாறு:முதலில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் -https://cms.rbi.org.in விஜயம் செய்து, புகாருக்கான இணைப்பை, ‘கிளிக்’ செய்ய வேண்டும். அதன் பிறகு பயன்பாட்டு மொழியை தேர்வு செய்து, வங்கி நடுநிலையாளரிடம் புகாரை தேர்வு செய்து, வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது, புகார் பகுதியில் பொதுவான தகவல்களை தெரிவித்து, புகார் நாளை, ‘கிளிக்’ செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக, புகார் விபரங்கள், புகார் வகை போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்.பின், வங்கி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் பகுதியில், புகார் தெரிவிக்கப்பட்ட வங்கி அல்லது அதிகாரி பற்றி குறிப்பிட்டு, அடுத்த பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.‘டிக்ளரேஷன்’ விபரங்களை நன்றாக படித்து, கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின், புகார் தொடர்பான பொருத்தமான தகவல்களை அளித்து சமர்ப்பிக்க வேண்டும்.இதன் பிறகு தானியங்கி பதில் கிடைக்கும். அதன் மூலம் புகார் நடவடிக்கை நிலையை அறியலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|