பதிவு செய்த நாள்
02 ஜூலை2019
00:22
நாமக்கல்:‘‘பண்ணையாளர்கள், ஒற்றுமையாய் இருந்து, முட்டை கொள்முதல் விலையில் இருந்து, ஒரே மாதிரியாக விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்,’’ என, ‘நெக்’ மண்டல தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாடு முழுவதும், முட்டைக்கான தேவை அதிகரித்து, உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பண்ணையாளர்கள் அனைவரும், ஒற்றுமையாக, முட்டைக்கு இதுதான் விலை என்று, எப்போது ஒரே குரலில் கூறுகிறோமோ, அன்று தான் நம்மால் நிம்மதியாக தொழில் செய்யும் சூழல் உருவாகும்.
சிலர், பண்ணையாளரிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அதைவிட அதிகமாக குறைவாக, விற்பனை செய்து, முட்டை சந்தையை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்களிடம், பண்ணையாளர்களாகிய நாம், கவனமாய் இருந்து தொழில் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|