பதிவு செய்த நாள்
02 ஜூலை2019
00:57
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின், துணை கவர்னரான, என்.எஸ்.விஸ்வநாதனுக்கு, மேலும் ஓராண்டுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.இவரது பதவி நீட்டிப்பு, அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.விஸ்வநாதனின் தற்போதைய பதவிக்காலம், 3ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய நியமனம், 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.விஸ்வநாதனை, மீண்டும் துணை கவர்னராக நியமிப்பதற்கு, அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியில், தற்போது விஸ்வநாதனையும் சேர்த்து மொத்தம், மூன்று துணை கவர்னர்கள் உள்ளனர். பி.பி.கனுங்கோ, எம்.கே.ஜெயின் ஆகியோர் மற்ற இருவர்.கடந்த மாதம், இன்னொரு துணை கவர்னரான, விரால் ஆச்சார்யா, தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக, ராஜினாமா கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|