ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விஸ்வநாதனுக்கு பதவி நீட்டிப்புரிசர்வ் வங்கி துணை கவர்னர் விஸ்வநாதனுக்கு பதவி நீட்டிப்பு ...  எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை ...
6.8 லட்சம் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
01:17

புதுடில்லி;நாட்டில் இதுவரை மொத்தம், 6.8 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டதாக, லோக் சபாவில் நேற்று அறிவிக்கப்பட்டது.இந்தியாவில், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை, 18.94 லட்சம் ஆகும். இவற்றில், 36.07 சதவீத நிறுவனங்கள், இதுவரை மூடப்பட்டு உள்ளன.மொத்தம் மூடப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை, 6.83 லட்சம். இவற்றில், மஹாராஷ்டிராவில் மட்டும், 1.42 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தலைநகர் டில்லியைப் பொறுத்தவரை, மொத்தம், 1.25 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.மேற்கு வங்கத்தில், 67 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சிக்கிம் மாநிலத்தில் ஒரு நிறுவனம் கூட மூடப்படவில்லை.மேலும், கடந்த, மூன்று ஆண்டுகளில், 594 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட, 79 புகார்களை, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் விசாரித்து வருகிறது.இது குறித்து, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:இரண்டு நிதியாண்டுகளாக, தொடர்ந்து, நிதிநிலை அறிக்கைகளை வழங்காத நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றின் பதிவை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.நிறுவனங்கள் சட்டப்படி, போலி நிறுவனம் என்பது எது என்பது குறித்து, தெளிவாக வரையறுக்கப்படவில்லை. கடந்த, 2016--- – 2019 வரையிலான காலத்தில், வட கிழக்கு மாநிலங்களில், 2,448 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மேலும், பெருநிறுவனங்கள் மோசடிகள் குறித்தும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நிறுவனங்களின் மோசடிகளை தடுக்கும் வகையில், தரவுகளை பகிர்ந்து கொள்வதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.பங்குச் சந்தையிலிருந்து விலக்கப்பட்ட நிறுவனங்கள், பங்குகள் ஒதுக்கப்பட்டதில் உள்ள வருமானம், நிறுவனங்கள் தொடர்பான தணிக்கை அறிக்கைகள் போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
வழக்கமான தரவு பரிமாற்றத்துடன் நில்லாமல், நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விசாரணைகளின் போது வேண்டுகோளின் அடிப்படையில், பிற தரவுகளும் பரிமாற்றம் செய்யப்படும்.நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம், வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும், கே.ஒய்.சி., விதிமுறைகளை துவங்கி உள்ளது. இதனையடுத்து, 16.80 லட்சம் நிறுவன இயக்குனர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி உள்ளனர்.இவ்வாறு, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)