பதிவு செய்த நாள்
02 ஜூலை2019
01:17
புதுடில்லி;நாட்டில் இதுவரை மொத்தம், 6.8 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டதாக, லோக் சபாவில் நேற்று அறிவிக்கப்பட்டது.இந்தியாவில், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை, 18.94 லட்சம் ஆகும். இவற்றில், 36.07 சதவீத நிறுவனங்கள், இதுவரை மூடப்பட்டு உள்ளன.மொத்தம் மூடப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை, 6.83 லட்சம். இவற்றில், மஹாராஷ்டிராவில் மட்டும், 1.42 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தலைநகர் டில்லியைப் பொறுத்தவரை, மொத்தம், 1.25 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.மேற்கு வங்கத்தில், 67 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சிக்கிம் மாநிலத்தில் ஒரு நிறுவனம் கூட மூடப்படவில்லை.மேலும், கடந்த, மூன்று ஆண்டுகளில், 594 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட, 79 புகார்களை, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் விசாரித்து வருகிறது.இது குறித்து, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:இரண்டு நிதியாண்டுகளாக, தொடர்ந்து, நிதிநிலை அறிக்கைகளை வழங்காத நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றின் பதிவை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.நிறுவனங்கள் சட்டப்படி, போலி நிறுவனம் என்பது எது என்பது குறித்து, தெளிவாக வரையறுக்கப்படவில்லை. கடந்த, 2016--- – 2019 வரையிலான காலத்தில், வட கிழக்கு மாநிலங்களில், 2,448 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மேலும், பெருநிறுவனங்கள் மோசடிகள் குறித்தும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நிறுவனங்களின் மோசடிகளை தடுக்கும் வகையில், தரவுகளை பகிர்ந்து கொள்வதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.பங்குச் சந்தையிலிருந்து விலக்கப்பட்ட நிறுவனங்கள், பங்குகள் ஒதுக்கப்பட்டதில் உள்ள வருமானம், நிறுவனங்கள் தொடர்பான தணிக்கை அறிக்கைகள் போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
வழக்கமான தரவு பரிமாற்றத்துடன் நில்லாமல், நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விசாரணைகளின் போது வேண்டுகோளின் அடிப்படையில், பிற தரவுகளும் பரிமாற்றம் செய்யப்படும்.நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம், வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும், கே.ஒய்.சி., விதிமுறைகளை துவங்கி உள்ளது. இதனையடுத்து, 16.80 லட்சம் நிறுவன இயக்குனர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி உள்ளனர்.இவ்வாறு, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|