பதிவு செய்த நாள்
02 ஜூலை2019
23:31
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018–2019 நிதியாண்டில், மொத்த பிரீமிய வருமானமாக 3.37 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது, 6.08 சதவீத வளர்ச்சியாகும். கடந்த நிதியாண்டில், பாலிசியின் பயன் தொகையாக, 2.51 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டை விட , இது, 26.66 சதவீதம் வளர்ச்சி ஆகும்.நிறுவனத்தின் மொத்த வருமானம், 5.61 லட்சம் கோடி ரூபாயாகும். இதற்கு முந்தைய ஆண்டில், 5.24 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஒப்பீட்டில், 7.10 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்.ஐ.சி.,யின் மொத்த சொத்துக்கள், கடந்த நிதியாண்டில், 31.12 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|