பதிவு செய்த நாள்
08 ஜூலை2019
00:08
பொதுத்துறை,
இ.டி.எப்., திட்டங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என, மத்திய
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சில்லறை முதலீட்டாளர்களை
ஈர்ப்புடையதாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இ.டி.எப்., எனப்படும்,
எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்கள், பங்குகள் போல பட்டியலிடப்பட்டு பரிவர்த்தனை
செய்யப்படும் ‘இண்டெக்ஸ்’ சார்ந்த நிதிகளாகும். பொதுத்துறை நிறுவன
பங்குகளில், முதலீடு செய்யும் இரண்டு இ.டி.எப்., நிதிகள், அரசு சார்பில்
அளிக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில், இந்த நிதிகளில், நிறுவன
முதலீட்டாளர்களே அதிக அளவில் பங்கேற்கின்றனர். இந்த நிதியாண்டிற்கான மத்திய
பட்ஜெட்டில், சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., நிதியில், வரிச்சலுகை வாய்ப்பு
அறிமுகம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிச்சலுகை வாய்ப்பு
அளிக்கும், இ.எல்.எஸ்.எஸ்., மியூச்சுவல் பண்ட் போல, இது அமையும் என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சில்லறை முதலீட்டாளர்கள், அரசு
இ.டி.எப்., முதலீடுகளின் பக்கம் ஈர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக, வல்லுனர்கள்
கருதுகின்றனர். எனினும், இந்த வரிச்சலுகை செயல்படும் விதம் தொடர்பாக, மேலும்
தெளிவு தேவை என்றும், வல்லுனர்கள் தெரிவித்துஉள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|