பதிவு செய்த நாள்
09 ஜூலை2019
04:37
புதுடில்லி, ஜூலை 9–டாடா குழுமம், அதன் மொபைல்போன் சேவை வணிகத்துக்கான, 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்துள்ளது.டாடா குழுமத்துக்கு சொந்தமான, ’டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்ட்ரா’ நிறுவனம், பார்தி ஏர்டெல்லுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
இருப்பினும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு, அதன், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டிய நிலை இருந்தது. இதனையடுத்து, திட்டமிட்டபடி, டாடா சன்ஸ் நிறுவனம், அனைத்து கடன்களையும் அடைத்துள்ளது. இதில், தொலைதொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய, 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனும் அடக்கம்.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2016ல் அறிமுகமான பிறகு, அதன் போட்டியை சமாளிக்க, பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்தே, 2017 அக்டோபரில், டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்ட்ரா நிறுவனமும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் இணைவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|