பதிவு செய்த நாள்
09 ஜூலை2019
04:37
புதுடில்லி, ஜூலை 9–மாருதி சுசூகி நிறுவனம், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, ஜூன் மாதத்திலும் வாகன உற்பத்தியை குறைத்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஜூன் மாதத்தில் உற்பத்தியை குறைத்துள்ளது. மாருதியின் இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை ஐந்தாவது மாதமாக தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில், 15.6 சதவீதம் அளவுக்கு உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், மொத்த வாகன உற்பத்தி, 1.11 லட்சம் ஆகும். இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்த வாகன உற்பத்தியானது 1.32 லட்சமாக இருந்தது.கடந்த மே மாதத்தில் 18 சதவீதம் அளவுக்கு உற்பத்தி குறைக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதமும். மார்ச் மாதத்தில் 20.9. சதவீதமும் பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதமும் உற்பத்தி குறைக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்துள்ளது.வாகன உற்பத்தியாளர்கள் கடந்த சில மாதங்களாக விற்பனையில் சரிவினை எதிர்கொண்டு வருகின்றனர்.இதையடுத்து சந்தையின் தேவைக்கு ஏற்ப தயாரிப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|