பதிவு செய்த நாள்
09 ஜூலை2019
04:39
புதுடில்லி:‘ரிசர்வ் வங்கி, மூன்று முறை வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில், அதன் பலனை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கொடுக்க வேண்டும்’’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.75 சதவீதம் குறைத்துள்ளது. எனவே வங்கிகள், வீட்டுக் கடன், தனிநபர் கடன்கள் மூலம், ரெப்போ வட்டிவிகித குறைப்பின் பலனை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.ரிசர்வ் வங்கி, 0.50 சதவீதம் வட்டியை குறைத்தும், வாடிக்கையாளர்களுக்கு 0.21 சதவீதம் அளவுக்கே பலன் கிடைத்துஉள்ளது.
உண்மையில், ஒட்டுமொத்த வங்கி அமைப்பில், பணப்புழக்கம் உபரி அளவுக்கு அதிகமாக உள்ளது. வங்கிகளுக்கு பணப்புழக்க பிரச்சினை இருந்தால், ரிசர்வ் வங்கி அதை தீர்க்க ஆதரவு வழங்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|