பதிவு செய்த நாள்
19 ஜூலை2019
05:00
புதுடில்லி: மத்திய அரசு, நிதி திரட்டும் முயற்சியில் ஒரு பகுதியாக, ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின், லாபம் ஈட்டும் துணை நிறுவனங்களை, பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை, கோல் இந்தியாவின், துணை நிறுவனங்களை பட்டியலிடுவதற்கான திட்டத்தை ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பான பேச்சு, ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே, நிடி ஆயோக், கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களை, தனித் தனி நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம், அவற்றை வளர்ச்சியடையச் செய்யலாம் என, தெரிவித்திருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.
தற்போது, கோல் இந்தியாவிடம், ‘ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ், பாரத் கோக்கிங் கோல், சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ், வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ், சவுத் கோல்பீல்ட்ஸ், நார்த்தன் கோல்பீல்ட்ஸ் மகாநதி கோல்பீல்ட்ஸ்’ என, மொத்தம், ஏழு துணை நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|