பதிவு செய்த நாள்
02 ஆக2019
23:48
சென்னை:வங்கிகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கான, புதிய வகை, ‘ரோபோடிக்‘ லாக்கர்களை, கோத்ரேஜ் செக்யூரிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர், புஷ்கர் கோகலே கூறியதாவது:
தற்போது, ’ரோபோடிக்’ லாக்கர்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன்படி வங்கிகளுக்காக தனியே லாக்கர் மையங்கள் அமைக்கப்படும். ஏ.டி.எம்., மையங்கள் போல இருக்கும், இந்த மையத்தில் நுழைய, பிரத்யேக கார்டு வழங்கப்படும். வாடிக்கையாளர் உள்ளே நுழைந்து, ரகசிய எண்ணை உள்ளிட்டால், அவரது லாக்கர் மட்டும் அவரிடம் வரும்.அதற்கான சாவியை பயன்படுத்தி திறந்துகொள்ளலாம்.
ஏ.டி.எம்., போல எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். வங்கிகளில் நம் லாக்கர் எது என தேடவேண்டியதிருக்கும். இங்கே அதுவே நம்மிடம் தானியங்கி முறையில் வரும்.இவை, குஜராத் மற்றும் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும்இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|