பதிவு செய்த நாள்
02 ஆக2019
23:49
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 2 ஆயிரத்து, 312 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
அதிக வருவாய் மற்றும் வாரா கடன் குறைந்தது ஆகிய காரணங்களால், இந்த உயர்வை நிறுவனம் ஈட்டியுள்ளது.கடந்த நிதியாண்டில், இதே காலகட்டத்தில், வங்கி, 4 ஆயிரத்து, 876 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.வங்கியின், மொத்த வருமானம், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 65 ஆயிரத்து, 493 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே மதிப்பீட்டு மாதத்தில், 70 ஆயிரத்து, 653 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சொத்துகளுடன் ஒப்பிடும்போது, வங்கியின் மொத்த வாரா கடன், 7.53 சதவீதமாக குறைந்து உள்ளது. இதுவே, கடந்த காலாண்டில், இதே காலகட்டத்தில், 10.69 சதவீதமாக இருந்தது. வங்கியின் நிகர வாரா கடன், 3.07 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 5.29 சதவீதமாக அதிகரித்திருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|