பதிவு செய்த நாள்
06 ஆக2019
10:55
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. அமெரிக்க - சீனா இடையே நிலவும் வர்த்தக போர், ரூபாயின் மதிப்பு சரிவு, ஜம்மு காஷ்மீர் தொடர்பான பரபரப்பு போன்ற காரணங்களால் நேற்றைய வர்த்தகம், கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 418 புள்ளிகளும், நிப்டி 135 புள்ளிகளும் சரிந்தன.
வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (ஆக.,6) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214.96 புள்ளிகள் உயர்ந்து 36,914.80ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 68.65 புள்ளிகள் உயர்ந்து 10,931.25ஆகவும் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, வங்கி, ஆட்டோமொபைல் சார்ந்த பங்குகள் உயர்வுடன் துவங்கியது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
கடந்த, ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.70.73ஆக சரிந்த நிலையில் இன்று(ஆக.,.6) உயர்வுடன் துவங்கின. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 26 காசுகள் உயர்ந்து ரூ.70.47ஆக வர்த்தகமானது. தொடர்ந்து காலை ரூ.10.50 மணியளவில் ரூபாயின் மதிப்பு ரூ.70.63ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|