பதிவு செய்த நாள்
09 ஆக2019
00:10
பெங்களூரு:‘ஜனா ஸ்மால் பைனான்ஸ்’ வங்கிக்கு, ’ஷெட்யூல்டு வங்கி’ எனும் அந்தஸ்தை, ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது.
’ஷெட்யூல்டு வங்கி’ என்பது, 1934 ம் ஆண்டு, ரிசர்வ் வங்கி சட்டத்தின், 2 வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள வங்கிகளைக் குறிப்பதாகும்.பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட, ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி, 2009ல், நிதி சேவைகளை வழங்கும் நிறுவனமாக துவக்கப்பட்டதாகும்.
தற்போது, இந்த வங்கிக்கு, நாடெங்கிலும், 260 கிளைகள் உள்ளன. 55 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இவ்வங்கிக்கு, ’ஷெட்யூல்டு வங்கி’ அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான, அஜய் கன்வால் கூறியதாவது:
’ஷெட்யூல்டு வங்கி’ எனும் அந்தஸ்தை, ரிசர்வ் வங்கி அளித்திருப்பது, எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். இது சேவை செய்வதற்கான எங்கள் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|