ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு  தாக்கல் செய்வதில் சுணக்கம் ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சுணக்கம் ...  சுற்றுலா மேம்பாட்டு நிறுவன நிகர லாபம் சுற்றுலா மேம்பாட்டு நிறுவன நிகர லாபம் ...
3,000 நிறுவனங்கள் 6 மாதங்களில் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2019
23:55

சென்னையில் நடைபெற்ற, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 3,000 நிறுவனங்கள், கடந்த ஆறு மாதங்களில் தொழில் துவங்கியுள்ளன.



தமிழக அரசு சார்பில், இரண்டாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கடந்த ஜனவரி, 23, 24 ஆகிய நாட்களில் சென்னையில் நடந்தது.இந்த மாநாட்டில், 304 பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் வாயிலாக, 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.



மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில், 12 ஆயிரத்து, 360 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, 32 ஆயிரத்து, 206 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.இதில், தற்போது வரை, 3,000 நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ளன. இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில், 3,000 நிறுவனங்கள், கடந்த ஆறு மாதங்களில் தொழில் துவங்கி உள்ளன.



இதன் வாயிலாக, 4,000 கோடி ரூபாய் முதலீடும், 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளன.தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்கள், தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.தொழில் துவங்குவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதற்கான தீர்வுகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. விரைவில், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)