பதிவு செய்த நாள்
22 ஆக2019
23:28
சென்னை: ‘‘தமிழகத்தில் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தினால், நிறைய அமெரிக்க நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது,’’ என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு, தலைமை செயல் அதிகாரி, அஜய் சகாய் தெரிவித்தார்.
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், ‘தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி’ என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில், ஏற்றுமதி செய்வதற்கு உள்ள வாய்ப்புகள், சவால்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அஜய் சகாய் பேசியதாவது:அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போரின் காரணமாக, இந்தியாவில், அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தினால், வாகன உற்பத்தி, மொபைல், எலக்ட்ரிக்கல் உட்பட, பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை நாம் ஈர்க்கலாம்.துறைமுகத்தில் பொருட்களை எடுத்து செல்வதில், பிரச்னைகள் உள்ளன. இவை போன்ற பிரச்னைகளை சரி செய்தால், ஏற்றுமதி அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர், இஸ்ரார் அகமது பேசியதாவது: இந்திய ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்கு, 9.5 சதவீதமாக உள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்தியாவில் இருந்து, 32 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெறுகிறது. இதை, 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|