பதிவு செய்த நாள்
26 ஆக2019
11:53
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று(ஆக.,26) புதிய உச்சமாக சவரன் ரூ.304 உயர்ந்து, ரூ.29,744ஆக விற்பனையாகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என தெரிகிறது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தினம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னை, தங்கம் விலை சந்தையில் இன்று காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,718க்கும், சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.29,744க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.39,760க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை உயர்ந்து 90 காசுகள் உயர்ந்து ரூ.50.10ஆக விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|