பதிவு செய்த நாள்
27 ஆக2019
03:22
புதுடில்லி : தனியார் நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கி வருவதைப் போல, முதன் முதலாக, பொதுத் துறையைச் சேர்ந்த, என்.டி.பி.சி., மின் நிறுவனமும் இம்முயற்சியில் இறங்கி உள்ளது.
முதற்கட்டமாக, நாட்டில் உள்ள, 10 நகரங்களிலிருந்து, அதிகாரிகள் மட்டத்தில் உள்ள, 18 பேருக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 11 பேர், மேலாளர் பதவி வகிப்பவர்கள்.இதற்கிடையே இத்திட்டம், ஊழியர்களிடையே வேறு சில கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த ஊழியர் ஒருவர் கூறியதாவது: நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள், ஊழியர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன.
இந்த முடிவை அவர்கள், நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒன்றாகப் பார்க்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து நிறுவன தரப்பில், ‘ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நிறுவனத்தை அதிக வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதாலும், வேலை, வாழ்க்கை இரண்டையும் சரியாக பாவிக்க, அவர்களுக்கு உதவும் என்பதாலும், இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|