‘ரிவோல்ட்’ நிறுவனத்தின் 2 புதிய அறிமுகங்கள் ‘ரிவோல்ட்’ நிறுவனத்தின் 2 புதிய அறிமுகங்கள் ... தங்கம் விலை சவரன் ரூ.184 சரிவு தங்கம் விலை சவரன் ரூ.184 சரிவு ...
நடப்பு நிதியாண்டில் வளர்ச்சிக்கே முன்னுரிமை!, ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2019
01:44

மும்பை: நடப்பு நிதியாண்டில், வளர்ச்சிக்கே அதிக முன்னுரிமை என, ரிசர்வ் வங்கி, அதன் ஆண்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, நேற்று ஆண்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் தேவையை அதிகரிப்பது மற்றும் தனியார் முதலீடுகளை பெருக்குவது ஆகியவற்றுக்கே அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும் வங்கிகள், வங்கி சாரா துறைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவது, உள்கட்டமைப்பு செலவுக்கு ஊக்கமளிப்பது, தொழிலாளர் சட்டம், வரி விதிப்பு உள்ளிட்ட பலவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, வணிகத்தை எளிதாக்குவது போன்றவற்றால் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்
 பன்னாட்டு நிதியம், உலக பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில், 3.6 சதவீதமாக இருந்தது; நடப்பு ஆண்டில், 3.2 சதவீதமாக குறையும் என, அறிவித்துள்ளது. இது, உலகப் பொருளாதாரம் பலவீனமடையக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி, நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 6.9 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிட்டுள்ளது நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வளர்ச்சி, 5.8 முதல், 6.6 சதவீதம் வரையிலும், இரண்டாவது அரையாண்டில், 7.3 முதல், 7.5 சதவீதமாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது அண்மையில் பெய்யத் துவங்கிய பருவ மழை, கரீப் பருவ விதைப்பில் முன்னேற்றம் ஆகியவை, பணவீக்க கவலைகளை தணித்துஉள்ளன சில்லரை விலை பணவீக்கம், இரண்டாவது காலாண்டில், 3.1 சதவீதமாகவும், இரண்டாவது அரையாண்டில், 3.5 –- 3.7 சதவீதமாகவும் இருக்கும் என, கணிக்கப்பட்டுஉள்ளது. மேலும், இது, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 3.6 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு உபரி லாபமாக கிடைத்த, 52 ஆயிரம் கோடி ரூபாயை, அரசுக்கு வழங்கியதை அடுத்து, ரிசர்வ் வங்கியின் இடர்ப்பாட்டு நிதி, 1.96 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துஉள்ளது நடப்பு ஆண்டில், வட்டி விகிதம், 1.10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், வட்டி விகிதம், 5.4 சதவீதமாக குறைந்துள்ளது நான்கு முறை தொடர்ந்து வட்டி விகிதம் குறைக்கப்பட்டது, வளர்ச்சியை மீட்டெடுக்க உதவியது கடந்த நிதியாண்டில், 71 ஆயிரத்து, 543 கோடி ரூபாய் அளவில் வங்கி முறைகேடுகள் நடந்துள்ளன. மொத்த முறைகேடுகளின் எண்ணிக்கை, 6,801. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டான, 2017 – -18ல், 5,916 முறைகேடுகள் மூலம், நடைபெற்ற முறைகேடுகளின் மதிப்பு, 41 ஆயிரத்து, 167 கோடி ரூபாய் வங்கி முறைகேடுகள், பொதுத் துறை வங்கிகளில் அதிகமாகவும், அடுத்த அளவில் தனியார் துறை வங்கிகளிலும், அதற்கடுத்து, வெளிநாட்டு வங்கிகளிலும் நடைபெற்று உள்ளது நடப்பு அறிக்கையாண்டில், மொத்தம், 3,766 முறைகேடுகள் நடைபெற்றுள்ளன;
இதன் மதிப்பு, 64 ஆயிரத்து, 509 கோடி ரூபாய்நாட்டில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தின் மதிப்பு, மார்ச் மாத நிலவரப்படி, 17 சதவீதம் உயர்ந்து, 21.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.இவ்வாறு, ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)