தங்கம் விலை சவரன் ரூ.184 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.184 சரிவு ... ஆக., சம்பளம் வழங்குவதில் சங்கடப்படும் பி.எஸ்.என்.எல்., ஆக., சம்பளம் வழங்குவதில் சங்கடப்படும் பி.எஸ்.என்.எல்., ...
ஜி.எஸ்.டி., விவகாரத்தில் 50 மேல்முறையீடு மனுக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2019
07:14

ஜி.எஸ்.டி., சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், சென்னையில், இதுவரை, 50 மேல்முறையீட்டு மனுக்கள் பதிவாகி உள்ளன.


ஜி.எஸ்.டி., எனும், சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டம், 2017 ஜூலையில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.வணிகர்கள் இந்த சட்டத்தை புரிந்து, அதை பின்பற்ற ஏதுவாக, முதல் ஆண்டில் நடைமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. அதனால், ஜி.எஸ்.டி., தொடர்பாக எந்த வழக்கும், மேல்முறையீடுகளும் வரவில்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், சில வணிகர்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி., வரியை திரும்ப கோரி, மேல்முறையீடு செய்துள்ளனர்.


இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சட்டம் அமலான இரண்டு ஆண்டுகளில், மேல் முறையீடு என, எந்த வணிகர்களும் வரவில்லை. தற்போதுதான், சென்னையில், 50க்கும் மேற்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. அதில், அவர்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெறுவதற்காக, இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, வரி ஏய்ப்பு மேல்முறையீடு என யாரும் வரவில்லை.


ஏனெனில், 2017 –18ம் ஆண்டுக்கான கணக்கு தாக்கல் செய்ய, நவ., வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.முழுமையான ஆண்டு கணக்கு தாக்கல் செய்த பின்பே, வரி ஏய்ப்பு செய்தது தெரியவரும். அதன் பின்தான், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)