பதிவு செய்த நாள்
31 ஆக2019
07:14
ஜி.எஸ்.டி., சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், சென்னையில், இதுவரை, 50 மேல்முறையீட்டு மனுக்கள் பதிவாகி உள்ளன.
ஜி.எஸ்.டி., எனும், சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டம், 2017 ஜூலையில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.வணிகர்கள் இந்த சட்டத்தை புரிந்து, அதை பின்பற்ற ஏதுவாக, முதல் ஆண்டில் நடைமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. அதனால், ஜி.எஸ்.டி., தொடர்பாக எந்த வழக்கும், மேல்முறையீடுகளும் வரவில்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், சில வணிகர்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி., வரியை திரும்ப கோரி, மேல்முறையீடு செய்துள்ளனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சட்டம் அமலான இரண்டு ஆண்டுகளில், மேல் முறையீடு என, எந்த வணிகர்களும் வரவில்லை. தற்போதுதான், சென்னையில், 50க்கும் மேற்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. அதில், அவர்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெறுவதற்காக, இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, வரி ஏய்ப்பு மேல்முறையீடு என யாரும் வரவில்லை.
ஏனெனில், 2017 –18ம் ஆண்டுக்கான கணக்கு தாக்கல் செய்ய, நவ., வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.முழுமையான ஆண்டு கணக்கு தாக்கல் செய்த பின்பே, வரி ஏய்ப்பு செய்தது தெரியவரும். அதன் பின்தான், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|