பதிவு செய்த நாள்
31 ஆக2019
07:19
புதுடில்லி: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், சமீபகாலமாக அதன் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கவே தடுமாறி வருகிறது. ஜூலை மாத சம்பளம் வழங்குவதில் ஒரு வார தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது என, நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: நிறுவனம், 1,400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினாலும், அதற்கு கடன்கள், வட்டி என சில பொறுப்புகள் உள்ளன. அதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்துக்கான சம்பளத்தை, உரிய தேதியில் வழங்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இருப்பினும், நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்கிடையே, ஊழியர் சங்கங்கள், சம்பளம் தருவது தாமதமானால், இம்முறை, நாடுதழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 179 ஆகும். மொத்த ஊழியர்களுக்கான செலவு, நிறுவனத்தின் மொத்த வருவாயில், 75 சதவீதமாகும். கடந்த நிதியாண்டில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் இழப்பு, 14 ஆயிரம் கோடி ரூபாய் ஆக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|