பதிவு செய்த நாள்
01 செப்2019
23:49
சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் பண்ட் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. அதற்கேற்ப மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களும் அதிகரித்துள்ளனர். ஆனால், மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான அடிப்படை அம்சங்களை பலரும் புரிந்து கொள்ளாத நிலை உள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் தொடர்பாக தவிர்க்க வேண்டிய தவறுகளை அறிந்திருப்பது அவசியம்.
அதிக பரவலாக்கம்: மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் போது, பரவலாக்கம் முக்கியம். அதாவது, ஒரு வகை நிதிகளை மட்டும் நாடாமல், தேவைக்கேற்ப பல வகை நிதிகளில் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால், பரவலாக்கம் மிகையாகி விடக்கூடாது என்பதும் முக்கியம். சந்தையின் பரவலான தன்மையை அளிக்க கூடிய ஒரு சில நிதிகள் போதுமானவை.
சந்தையை கணிப்பது: மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்வது, ஒருவரின் நிதி இலக்குகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். மாறாக, சந்தையின் போக்கை கணித்து அதற்கேற்ப நிதிகளை தேர்வு செய்வது சரியான யுக்தியாக இருக்காது. சீரான முதலீடு வாய்ப்பான, எஸ்.ஐ.பி., வழியை நாடலாம்.
முதலீடு ஒதுக்கீடு: மியூச்சுவல் பண்ட் முதலீடு, ஒருவரின் முதலீடு கூடையில் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இதை முதலீடு ஒதுக்கீடு (அசெட் அலகேஷன்) என்கின்றனர். தங்கம், நிலையான வருமானம், பங்குகள் ஆகிய முதலீட்டு வகைகளில், உங்களுக்கான தொகுப்பை தீர்மானித்து அதற்கேற்ப மியூச்சுவல் பண்டை தேர்வு செய்ய வேண்டும்.
இடர் தன்மை: முதலீட்டாளர்கள் தங்கள், ‘ரிஸ்க்’ எனும் இடர் தன்மைக்கு பொருந்தாத நிதிகளை தேர்வு செய்யக்கூடாது. தங்கள் ரிஸ்க் தன்மையை மனதில் கொண்டு, அதற்கேற்ப நிதிகளில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, சமபங்கு முதலீடுகள் இளம் வயதினருக்கு ஏற்றதாக இருக்கும். வயதானவர்களுக்கு கடன்சார் முதலீடு அதிகம் இருக்க வேண்டும்.
கண்காணிப்பு: மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்த பிறகு, அதன் பலனை கண்காணிக்காமல் இருப்பது, பலரும் செய்யும் தவறாகும். முதலீடு செய்துள்ள நிதிகளின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இது, நிதி இலக்கிற்கு ஏற்ப முதலீடு அமைவதை உறுதி செய்வதோடு, மாற்றம் தேவையா என்றும் வழிகாட்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|