எல்.ஐ.சி., சொத்து மதிப்பு எல்.ஐ.சி., சொத்து மதிப்பு ... தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.664 சரிவு தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.664 சரிவு ...
அன்னிய நேரடி முதலீடு 28 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
02:38

புதுடில்லி:அன்னிய நேரடி முதலீடு, ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 28 சதவீதம் அதிகரித்துள்ளது என, அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான, ஏப்ரல் முதல், ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், அன்னிய நேரடி முதலீடு, 28 சதவீதம் உயர்ந்து, 16.33 பில்லியன்அமெரிக்க டாலராக அதாவது, 1.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சிங்கப்பூர்இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 12.75 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது, 91 ஆயிரத்து, 800 கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், சேவைகள் துறை, கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை, தொலை தொடர்பு துறை, வர்த்தக துறை ஆகியவை, அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடு, சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களை, மொரீஷியஸ், அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
மதிப்பீட்டு காலாண்டில், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்திருந்த போதிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அவர்கள் தங்கள் முதலீடுகளை அதிகளவில் திரும்ப பெற்றுக் கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 5,920 கோடி ரூபாய் முதலீட்டை, இந்திய நிதிச் சந்தைகளிலிருந்து அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.
மத்திய அரசு, அன்னிய முதலீட்டாளர்களின் வருமானம் மீதான கூடுதல் வரியை, திரும்ப பெறுவதாக, சமீபத்தில் அறிவித்திருந்தும், முதலீடுகள்அதிகளவில் திரும்ப பெறப்பட்டுள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், மொத்தம், 17 ஆயிரத்து, 592 கோடி ரூபாயை, பங்குச் சந்தை யிலிருந்து வெளியேஎடுத்துள்ளனர்.இதில், 11 ஆயிரத்து, 672 கோடி ரூபாயை, கடன் பிரிவுகளில் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து, 5,920 கோடி ரூபாய் முதலீடுவெளியேறியுள்ளது.இதுவே, கடந்த ஜூலை மாதத்தில், மொத்தம், 2,985 கோடி ரூபாயை, நிதிச் சந்தைகளிலிருந்து வெளியே எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, உள்கட்டமைப்பு துறையை மாற்றியமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு பெரிய முதலீடுகள் தேவைப்படுவதால், அன்னிய நேரடி முதலீடுகள் முக்கியமானதாகிறது.
அதிகரிக்கும்சமீபத்தில் மத்திய அரசு, சிங்கிள் பிராண்டு சில்லரை வர்த்தகம், நிலக்கரி, சுரங்கம் மற்றும் ஒப்பந்த உற்பத்தி போன்ற துறைகளில், அன்னிய முதலீட்டு விதிமுறைகளை அரசு தளர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், அமெரிக்கா –- சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான, வர்த்தக மோதல் காரணமாக, உலக சந்தைகளில் அச்சங்கள் அதிகரித்துள்ளன.
இதன் காரணத்தால், மத்திய அரசு, கூடுதல் வரியை திரும்ப பெற்றுக் கொள்வது உள்ளிட்ட பலவற்றை அறிவித்த பிறகும், முதலீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும், வரும் மாதங்களில் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முதல் காலாண்டில் அன்னிய முதலீடுகள்:துறை முதலீடு (ரூபாய் கோடிகளில்)சேவைகள் துறை 20,160மென்பொருள், வன்பொருள் 16,128தொலை தொடர்பு 30,384வர்த்தகம் 8,136முதல் காலாண்டில் அதிகம் முதலீடு செய்த நாடுகள்:நாடு முதலீடு (ரூபாய் கோடிகளில்)சிங்கப்பூர் 38,376மொரீஷியஸ் 33,624அமெரிக்கா 10,440நெதர்லாந்து 9,720ஜப்பான் 3,398

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)